மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று உணவு பொருட்கள் வழங்கிய மதுரை மாவட்ட போலீசார்!

மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலைய சரகத்தில் வசிக்கும், கண் பார்வையற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படுகின்றனர் என்ற தகவலை அறிந்த, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப.அவர்கள் வழிகாட்டுதலின் படி, மேற்கண்ட 21 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியை மேலூர் காவல் ஆய்வாளர், திரு. தெய்வீக பாண்டியன், சார்பு ஆய்வாளர், திரு. பாலமுருகன், திரு சண்முக பாண்டியன்,காவலர்கள் மூலமாக பயனாளிகள் வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கி உதவி செய்தனர்.